ADDED : மே 29, 2025 11:28 PM
விழுப்புரம்: மறுவாழ்வு மையத்தில் இருந்து இளைஞர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி முத்தரையர்பாளையத்தை சேர்ந்தவர் பாரதிராஜா மகன் பிரவீன், 19; பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மது போதைக்கு அடிமையான இவர், விழுப்புரம் அடுத்த கோலியனுார் மறுவாழ்வு மையத்தில் கடந்த மார்ச் மாதம் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நேற்று முன்தினம் வெளியில் சென்ற அவர், மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.