/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கீழ்புத்துப்பட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கீழ்புத்துப்பட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கீழ்புத்துப்பட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கீழ்புத்துப்பட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கீழ்புத்துப்பட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : மே 28, 2025 07:03 AM

விழுப்புரம்,: சுடுகாடு இடத்தை வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்கக்கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கங்கை நகர் பகுதி மக்கள் அளித்த மனு:
எங்கள் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு அருகில் தற்போது குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதனால், இங்குள்ள சுடுகாடு இடத்தை அரசு அதிகாரிகள் வேறு பயன்பாட்டிற்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
எனவே, எங்களின் முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு வசதியாக சுடுகாடு இடத்தை வேறு எந்த பயன்பாட்டிற்கும் ஒதுக்காமல் இருக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.