ADDED : அக் 05, 2025 03:21 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மகாராஜபுரம் இ.பி.,காலனியை சேர்ந்தவர் நாகலிங்கம் மனைவி கோவிந்தம்மாள்,88; இவர், வயது முதிர்வின் காரணமாக, காதுகேளாமல் இருந்து வந்தார்.
கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து, அவரது மகன் சங்கர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


