/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 20, 2025 05:14 AM

திண்டிவனம்: திண்டிவனம் - விழுப்புரம் சாலையில், மணல் குவியலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
திண்டிவனத்திலிருந்து, விழுப்புரம் செல்லும் சாலை, கடந்த ஜன., மாதம் முதல்வர் வருகைக்காக புதியதாக தார் சாலை போடப்பட்டது. இந்த சாலையோரம் தற்போது அதிகளவில் மண் தேங்கியுள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இதனால், விபத்து ஏற்படும் முன், குவிந்துள்ள மணலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர்நடவடிக்கை எடுக்க வேண்டும்.