ADDED : ஜூன் 25, 2025 01:18 AM
விழுப்புரம் :விழுப்புரத்தில் பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் பவர் ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் அறிவழகன் மகள் கோமதி, 29; இவர், புதுச்சேரி மாநிலம், திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 22ம் தேதி பணிக்கு சென்ற கோமதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.
கோமதியின் தாய் சரோஜா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.