ADDED : ஜூன் 01, 2025 11:18 PM
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேல்செவலாம்பாடிகுப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகள் நதியா, 32; திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர், பருதிபுரம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 30ம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது தாய் விஜயா அளித்த புகாரின் பேரில், மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.