ADDED : மே 14, 2025 03:10 AM
செஞ்சி : மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
செஞ்சி அடுத்த ஆர்க்காம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் நிஷாந்தி, 19; திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.