Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வட்டிக்கடையை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை

வட்டிக்கடையை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை

வட்டிக்கடையை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை

வட்டிக்கடையை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை

ADDED : ஜூன் 24, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வட்டிக்கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்தவர் தில்லை கோவிந்தன், 40; இவர் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் வட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவில் கடையின் எதிர் வீட்டைச் சேர்ந்தவர் கடையிலிருந்து சத்தம் வருவதாக தில்லை கோவிந்தனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடன் அவர் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் ெஷட்டர் உடைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா, ஹார்டு டிஸ்க் மற்றும் அடகு வைக்கப்பட்டிருந்த கொலுசுகள் உட்பட அரை கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், கெடார் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகி யோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us