Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு

ADDED : மே 24, 2025 12:18 AM


Google News
செஞ்சி: மதுவுடன் டர்பன் ஆயிலை கலந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செஞ்சி அடுத்த புலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம், 80; விவசாயி. உடல் வலி காரணமாக அடிக்கடி மது அருந்தி வந்தார்.

கடந்த 22ம் தேதி மாலை மதுவுடன் வீட்டில் இருந்த டர்பன் ஆயிலை தண்ணீர் என கலந்து குடித்தார்.

இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு செல்ல நேற்று காலை வீட்டிற்கு அழைத்து வந்தபோது அங்கு அவர் இறந்தார்.

அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us