Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மொபைல்போன் திருடிய நபர் கைது

மொபைல்போன் திருடிய நபர் கைது

மொபைல்போன் திருடிய நபர் கைது

மொபைல்போன் திருடிய நபர் கைது

ADDED : ஜூன் 28, 2025 07:16 AM


Google News
விழுப்புரம் : காணை அருகே தனியார் நிறுவன ஊழியர் மொபைல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டை சேர்ந்தவர் வீரப்பிள்ளை மகன் செல்வகுமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 25ம் தேதி இரவு, சென்னாகுணம் பகுதியில் உள்ள அலுவலக வளாகத்தில் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார். அவரது பையிலிருந்த மொபைல்போன் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, மொபைல்போனை திருடிய, திண்டிவனம் அடுத்த ஆச்சிப்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகன் அய்யனார், 40; என்பவரை கைது செய்தனர். இவர் மீது, ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதால், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us