Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

ADDED : செப் 26, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
செஞ்சி:சர்க்கரை ஆலையில் இயந்திரம் வெடித்து சிதறியதில், மெஷின் ஆப்பரேட்டர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாலப்பாடியை சேர்ந்தவர் புருஷோத்தமன், 25. இவர், செம்மேட்டில் தனியார் சர்க்கரை ஆலையில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று காலை, 8:45 மணியளவில் சர்க்கரையும், மொளாசசையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரம் வெடித்தது.

இதில், புருஷோத்தமன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார், விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us