/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலை பள்ளி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி சாதனை ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலை பள்ளி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி சாதனை
ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலை பள்ளி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி சாதனை
ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலை பள்ளி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி சாதனை
ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலை பள்ளி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி சாதனை

தேசப்பற்றை நிலைநாட்டிய
பெருமைக்குரியவர்கள்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு நாட்டு விடுதலைக்காக சிறை சென்ற மறைந்த தியாகிகள் திருவேங்கடம், பழனிசாமி, சிவலிங்கனார் ஆகியயோர் இங்குள்ள ஆரம்ப பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது பெருமைக்குரியது.
பல தலைமுறைகளுக்கு
சிறந்த வழிகாட்டி
ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் இப்பள்ளி கல்வியிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது. கல்வி என்பது சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு பல தலைமுறைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக, தரமான கல்வியை வழங்குகிறது. ஒழுக்கம், மனிதநேயம், பொது அறிவு ஆகியவற்றையும் வளர்க்கிறது. 'அறிவும் ஒழுக்கமும் உடையவர் உயர்வர்' என்பதற்கான உயிர்நிலை சான்றாக இப்பள்ளி திகழ்கிறது. - பாவலர் மரிய தமிழரசி, ஆசிரியை
அர்ப்பணிப்புடன்
பணிபுரியும் ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் நாற்றங்கால் என்ற பெருமைக்குரிய பள்ளியில் நான் முன்னாள் மாணவர். இன்று அதே பள்ளியில் தொடக்கப்பள்ளிக்கு தலைமையாசிரியர். ஆசிரியர்கள் தன்னிகரில்லாத அர்ப்பணிப்புடன் கற்பித்து வருகின்றனர். வல்லவர்களாக மட்டுமின்றி, மாணவர்களை நல்லவர்களாகவும் வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்கின்றனர். பள்ளியின் குடிநீர், கணினி வசதியுடன், வகுப்பறையை புத்தாக்கமும் செய்துள்ளனர். இதுவரை சாதித்திருப்பதைவிட எதிர்காலத்தில் மேலும் சாதனைளை இப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. -அறிவழகன், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்.
முன்னாள் மாணவர்
என்பதில் பெருமை
நான் படித்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்பதில் கூடுதல் பெருமை கொள்கிறேன். பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் இன்று அரசியலிலும், அரசுத்துறையிலும் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். முன்னாள் மாணவர் சிற்றரசு, தற்போது சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும், மாநகராட்சி பணிகள் குழு தலைவராகவும் உள்ளார். இவர் பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார். தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம் போன்ற அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார். -டாக்டர் கதிர்வேல், பி.டி.ஏ., தலைவர்.
பள்ளி வளர்ச்சிக்கு
கல்வி அமைச்சர் ஆதரவு
45 ஆண்டுகளாக இருந்த உயர்நிலைப் பள்ளியை கிராம மக்கள் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள மஸ்தானுடன் இணைந்து எடுத்த தொடர் முயற்சியால் 2006ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சிற்றரசு, மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் பள்ளிக்கு கட்டட வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் ஏற்பாட்டில் கல்வியமைச்சர் மகேஷ் பள்ளியில் ஆய்வு செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதாரவளித்து வருகிறார். -கதிரவன் சீனு, முன்னாள் மாணவர்.
கல்விக்காக அடித்தளமிட்டவர்களை
பெருமையுடன் நினைவு கூறும் மக்கள்
இப்பள்ளி ஒவ்வொரு முறையும் வளர்ச்சி படிநிலை வந்த போது, விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைப்பதில் பெரும் சவாலாக இருந்தது. தொடக்கப் பள்ளியாக தரம் உயர்ந்த போது கூடுதல் கட்டடம் கட்ட திரவுபதியம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா குடும்பத்தினரும், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த போது சாவடி நாராயணசாமி பாகவதர் தலைமையில் இயங்கி வந்த வகுளபூஷண பாஸ்கர சபையினர் சபை கட்டடத்தையும் பள்ளிக்காக வழங்கினர். பெரிய வகையறா செவலை வீட்டு குடும்பத்தார் 3 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினர். இது போன்று கல்விக்காக அடித்தளமிட்டவர்களை கிராம மக்கள் இன்றளவும் பெருமையுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர். -கதிரவன், முன்னாள் மாணவர், நிலவள வங்கி அலுவலர்,


