
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஜனனோற்சவ விழா நடந்தது.
அவலுார்பேட்டையில் ஆரிய வைசிய சமூகத்தினர் சார்பில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜனனோற்சவ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூ பல்லக்கில் வீதி உலா நடந்தது. திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.