Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மயான கொள்ளை

மயான கொள்ளை

மயான கொள்ளை

மயான கொள்ளை

ADDED : மார் 18, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: அனிச்சம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.

விழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மகாராஜபுரம் மயானத்தில் மயானக்கொள்ளை நடந்தது.

பக்தர்கள் அங்காளம்மன், காளி, குறத்தி, காட்டேரி, பாவாடைராயன் சுவாமிகள் வேடத்தில் ஊர்வலமாக சென்றனர். இரவு 7.00 மணிக்கு கும்ப படையல் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us