Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 25, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விழுப்புரத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெயகனேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தார். மாநில பிரசார செயலாளர் அதிதேவி வரவேற்றார். மாநில இணைச் பொதுச்செயலாளர் சிவக்குமார், மாநில செயலாளர்கள் இளங்கோவன், அப்பாதுரை சிறப்புரையாற்றினர்.

மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் பாண்டியன், துணைத் தலைவர் கேசவன், மாநில துணைத் தலைவர்கள் சம்பத், சங்கர், சிவக்கொழுந்து, சிராஜிதின், தணிகைவேல், ரஷீத், சுந்தரவள்ளி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை, டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us