Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நள்ளிரவில் ஆடு திருட்டு; போலீஸ் விசாரணை

நள்ளிரவில் ஆடு திருட்டு; போலீஸ் விசாரணை

நள்ளிரவில் ஆடு திருட்டு; போலீஸ் விசாரணை

நள்ளிரவில் ஆடு திருட்டு; போலீஸ் விசாரணை

ADDED : ஜூலை 05, 2025 04:46 AM


Google News
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆடு திருடும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோபிநாதன்,25; எலக்ட்ரீசியன். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், 4 ஆடுகளை காரில் துாக்கி கொண்டு தப்பினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் மற்றும் கோபிநாதன் பைக்கில் அந்த காரை மொபைல் போனில் வீடியோ எடுத்து கொண்டே விரட்டி சென்றனர்.

அந்த கார் அதிவேகமாக திருச்சி - சென்னை சாலையில் விழுப்புரம் மார்க்கமாக சென்று மறைந்தது. இதேபோல் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த இளையான் மகன் கந்தசாமி என்பவரின் வீட்டில் கட்டி வைத்திருந்த, 3 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us