Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மடுகரை அருகே 2 ஆயிரம் மனைப்பிரிவுகளுடன்  'பிரெஞ்சு சிட்டி' துவக்க விழா 

மடுகரை அருகே 2 ஆயிரம் மனைப்பிரிவுகளுடன்  'பிரெஞ்சு சிட்டி' துவக்க விழா 

மடுகரை அருகே 2 ஆயிரம் மனைப்பிரிவுகளுடன்  'பிரெஞ்சு சிட்டி' துவக்க விழா 

மடுகரை அருகே 2 ஆயிரம் மனைப்பிரிவுகளுடன்  'பிரெஞ்சு சிட்டி' துவக்க விழா 

ADDED : ஜூன் 30, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
வானுார்: மடுகரை பஸ் நிறுத்தம் அருகில் 2 ஆயிரம் புதிய மனைப்பிரிவுகளுடன் அமைக்கப்பட்டுள்ள, பிரெஞ்சு சிட்டியில் விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தாய் குரூப்ஸ், எஸ்.ஆர்., பிரமோட்டார்ஸ், ஸ்ரீ பாலாஜி ரியல் எஸ்டேட் ஆகியவை இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரை பதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அருகேயுள்ள மடுகரை பஸ் நிலையம் அருகில், சிறுவந்தாடு செல்லும் சாலையில், 2000 ஆயிரம் புதிய மனைப்பிரிவுகளுடன் 'பிரெஞ்சு சிட்டி' அமைத்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டியை மிஞ்சும் அளவிற்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் முதல் மனைப்பிரிவுகள் விற்பனைக்கு உள்ளது. இந்த மனைப்பிரிவில், 60 அடி, 40 அடி, 33 அடி அகலமான தார்சாலை வசதிகளும், ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி அனைத்து மனைகளுக்கும் மும்முனை மின்சார வசதி, தெரு மின் விளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மனைப்பிரிவுகள் அனைத்தும் டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்றுள்ளது. மனைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரப்பதிவு, தனிப்பட்டா இலவசம். சிறப்பான விலையில், தரமான இந்த மனைப்பிரிவில் தங்களது மனைகளை முன்பதிவு செய்வதற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்தனர்.

நேற்று நடந்த மனைப்பிரிவு விற்பனை துவக்க விழாவில் பிரெஞ்சு சிட்டி குழுமத்தின் நிர்வாகிகள் சவுமியாநாராயணன், பாலாஜி சம்பத், செந்தில்குமார், பாலவசந்த், சுதர்சன், கிருஷ்ணன், அலெக்ஸ், வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us