ADDED : மார் 18, 2025 10:35 PM
செஞ்சி : மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
செஞ்சி அடுத்த பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகள் ராஜேஸ்வரி, 22; திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவரை கடந்த 15ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.