ADDED : ஜூன் 08, 2025 10:31 PM
விழுப்புரம் : சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நாகராஜன் தலைமை தாங்கினார். அந்தோணிராஜ் வரவேற்றார். பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் நதியா, சாதனா, சுதா ஆகியோரை பாராட்டி, ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது.
விழாவில், ராமேஸ்வரம் சித்தார்த்தன், தமிழ்ச்செல்வன், பாரி வள்ளல், தண்டபாணி, பொன்னுசாமி வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சவுரியம்மாள், சங்கீதா, கவிதா, சத்யா, செய்யது, நிஷா, முக்தா சீனிவாசன், கவிதா, குமாரி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.