Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி

ADDED : ஜூன் 06, 2025 06:41 AM


Google News
மயிலம்; மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மஹாபு, 70; இவர் நேற்று சென்னைக்கு சென்று, உறவினர்களுடன் காயல்பட்டினத்திற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். இவர்கள் வந்த கார் நேற்று காலை 8:00 மணியளவில் மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை குளக்கரை அருகே வந்த போது முன்னாள் சென்ற காரின் டிரைவர் திடீரென பிரேக்போட்டதால் , பின்னால் சாலையில் வந்து கொண்டிருந்த கார் எதிரே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பின்னால் வந்த காரில் பயணம் செய்த மஹாபு 70; சுனைவான் குழந்தைகள் மஹாபுஹிசம் 8; ஜனத் 3; மற்றும் சாலையில் நடந்து சென்ற ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கண்ணன், 75; ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஹாபு இறந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us