ADDED : செப் 14, 2025 01:32 AM
விழுப்புரம் : காணை அருகே, குடிநீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த முதியவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி, 85; இவர் கடந்த, 10ம் தேதி வீட்டில் கவனக்குறைவாக குடிநீர் என நினைத்து, மண்ணெண்ணையை குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.