விழுப்புரம்: தமிழக கவர்னரை கண்டித்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். அகில இந்திய காங்., உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு நாராயணசாமி, விஜயராகவன், பொது செயலாளர் விஸ்வநாதன், எஸ்.சி., துறை மாவட்ட தலைவர் சேகர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், அசாம் மாநிலத்தில் காங்., தலைவர் ராகுல் யாத்திரையில் வாகனம் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.,வை கண்டித்தும், காந்தியை பற்றி அவதுாறாக பேசிய கவர்னர் ரவியை கண்டித்தும் பேசினர்.


