Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அடையாளம் தெரியாத நபர் இறப்பு

அடையாளம் தெரியாத நபர் இறப்பு

அடையாளம் தெரியாத நபர் இறப்பு

அடையாளம் தெரியாத நபர் இறப்பு

ADDED : மே 13, 2025 11:43 PM


Google News
விழுப்புரம் : ரயில் நிலையத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் ரயில் நிலையம் டிக்கெட் வழங்குமிடத்தில், 50 வயது மதிக்கதக்க நபர் கடந்த 10ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us