ADDED : ஜூன் 16, 2025 12:41 AM
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கும் இடத்தில் நேற்று காலை 55 வயதுள்ள முதியவர் இறந்து கிடந்தார்.
இறந்தவர் யார் என்ற முகவரி தெரியவில்லை. இது குறித்து வி.ஏ.ஓ., கார்த்திகேயன் புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.