Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி

சேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி

சேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி

சேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி

ADDED : ஜூலை 04, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு - கீழ்ப்பெரும்பாக்கம் ரயில்வே சாலை சேதமடைந்துள்ளதால் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.

விழுப்புரத்திலிருந்து கீழ்ப்பெரும்பாக்கம், அரசு கலை கல்லுாரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அதிகளவில் ரயில்வே தார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாலையின் முகப்பிலேயே தார்ச்சாலை உடைந்து பெரும் பள்ளமாக உள்ளதால், அந்த வழியாக வந்து திரும்பும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

அதே போல் அங்குள்ள கிழக்கு பாண்டி சாலை பிரதான சாலையின் மையத்தில் உள்ள பழைய இரும்பு கட்டையும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஆபத்தான நிலையில் தொடர்கிறது. இதனால், அந்த பகுதியில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால், அங்கு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us