/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி அரசு கல்லுாரியில் 9ம் தேதி கலந்தாய்வு செஞ்சி அரசு கல்லுாரியில் 9ம் தேதி கலந்தாய்வு
செஞ்சி அரசு கல்லுாரியில் 9ம் தேதி கலந்தாய்வு
செஞ்சி அரசு கல்லுாரியில் 9ம் தேதி கலந்தாய்வு
செஞ்சி அரசு கல்லுாரியில் 9ம் தேதி கலந்தாய்வு
ADDED : ஜூன் 04, 2025 12:28 AM
செஞ்சி : செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 9ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கல்லுாரி முதல்வர் ஸ்ரீவித்யா செய்தி குறிப்பு:
செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் மற்றும் பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கு இந்தாண்டு சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
கலந்தாய்விற்கு வரும் போது பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையவழி விண்ணப்ப படிவ நகல்கள் இரண்டு, மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் 3 நகல்கள் அல்லது பள்ளி தலைமையாசிரியரால் சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் தாள் அசல் மற்றும் 3 நகல்கள், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள், வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் முதல் பக்கம் 3 நகல்கள், கைப்பேசியுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை அசல் மற்றும் 3 நகல்கள், கடவு சீட்டு அளவு புகைப்படங்கள் 5, வருமான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும்.
மேலும் சேர்க்கை உறுதி செய்யப்பட்டால் செலுத்த வேண்டிய கட்டண தொகையாக பி.ஏ., - பி.காம்., - பி.பி.ஏ., மாணவர்கள் 3,420 ரூபாய். பி.எஸ்சி., மாணவர்கள் 2,540 ரூபாய் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.