Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

ADDED : ஜூன் 24, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பள்ளி, கல்லுாரி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நகர போக்குவரத்து போலீசார் சார்பில் விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன் முன்னிலை வகித்தனர். தலைமைக் காவலர்கள் பிரபாகரன், நிதிக்குமார் உட்பட வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நகரில் உள்ள பள்ளி, கல்லுாரி நேரங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் நகருக்குள் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அனுமதி இல்லை என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு, கழிவுநீர், பார்சல் சர்வீஸ், சுமை துாக்கும் தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்கள் பலரும் சம்மதம் தெரிவித்தனர்.

தொடர்ந்து, விழுப்புரம் நகரில் ஏற்பட்ட வாகன விபத்து தொடர்பாக குறும்படம் காண்பிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us