ADDED : செப் 05, 2025 08:12 AM
திருவெண்ணைநல்லூர்; மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சின்னசெவலை மலட்டாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் அதை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.
போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பியோடிய நபர்களை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.