Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுவர் பூங்கா திறப்பு விழா

சிறுவர் பூங்கா திறப்பு விழா

சிறுவர் பூங்கா திறப்பு விழா

சிறுவர் பூங்கா திறப்பு விழா

ADDED : ஜூன் 23, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடந்தது.

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவெண்ணெய்நல்லுாரில் கலைஞர் நுாற்றாண்டு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் வரவேற்றனர். நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப், முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர் பொன்முடி எம்.எல்.ஏ., சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள் சலீமா தாஜூதீன், பாபு, அறிவழகன், ஷாஜகான், ரகு, கமலா கலியபெருமாள், செந்தில் முருகன், பாக்கியராஜ் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us