/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டாக்சி ஓட்டுநரை தாக்கிய மூவர் மீது வழக்கு டாக்சி ஓட்டுநரை தாக்கிய மூவர் மீது வழக்கு
டாக்சி ஓட்டுநரை தாக்கிய மூவர் மீது வழக்கு
டாக்சி ஓட்டுநரை தாக்கிய மூவர் மீது வழக்கு
டாக்சி ஓட்டுநரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 02, 2025 06:21 AM
வானூர், : ஆரோவில் பகுதியில் 'டாக்சி' ஓட்டுநரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 30; டாக்சி ஓட்டுநர்.
நேற்று முன்தினம் இவர் 'ஓலா' மூலம் புக் செய்த பயணிகளை தனது டாக்சியில் ஏற்றிக்கொண்டு ஆரோவில் பகுதிக்கு சென்றார். அங்கு அவர்களை இறக்கி விட்டு, மீண்டும் வாகனத்தை எடுத்தார்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர், மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர்.
இதில் காயமடைந்த மணிகண்டன், ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.