Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு

புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு

புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு

புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 05, 2025 04:44 AM


Google News
விழுப்புரம் : எஸ்.பி., அலுவலகம் முன் யூ டியூபர் போட்டோக்களை எரித்த புரட்சி பாரதம் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் புரட்சி பாரதம் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், அக்கட்சியின் நிறுவனர் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரினர். பின், எஸ்.பி., அலுவலகம் முன் யூ டியூபர் போட்டோக்களை எரித்தனர்.

இது குறித்து மாவட்ட தலைவர் தமிழரசன், மாநில துணை செயலாளர் பூவையார், ஒருங்கிணைப்பாளர் தீபன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ் உட்பட ஆறுபேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us