/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு வழங்கிய வீட்டின் சுவரை இடித்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது அரசு வழங்கிய வீட்டின் சுவரை இடித்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
அரசு வழங்கிய வீட்டின் சுவரை இடித்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
அரசு வழங்கிய வீட்டின் சுவரை இடித்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
அரசு வழங்கிய வீட்டின் சுவரை இடித்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
ADDED : மே 31, 2025 05:29 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே முன்விரோதம் காரணமாக அரசு வழங்கிய வீட்டை இடித்த 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கெடார் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் பார்த்தீபன், 60; கூலித் தொழிலாளி. இவருக்கு அரசு வழங்கிய வீடு கட்ட அடித்தளமிட்டு சுவர் எழுப்பி கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த செல்வன் மனைவி சரஸ்வதி, 62; அவரது மகன்கள் வீரபாண்டியன், 39; சரவணன், 38; உமாபார்வதி, 48; ஆகியோர் கூட்டாக சேர்ந்து, முன்விரோதம் காரணமாக பார்த்தீபன் வீட்டின் சுவரை இடித்தனர்.
இது பற்றி கெடார் போலீ சில் பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், வீட்டை இடித்த 4 பேர் மீதும் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்தனர்.