/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு
பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு
பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு
பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 02, 2025 01:41 AM
விழுப்புரம்,: முன்விரோத தகராறில் பெயிண்டரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து வாலிபரை கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதுாரை சேர்ந்தவர் மணி, 30; பெயிண்டர். இவர், வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கட் (எ) தீனா, 23; என்பவரின் வீட்டை போலீசுக்கு காண்பித்தார்.
இதனால், ஏற்பட்ட முன்விரோதத்தால், இரு தினங்களுக்கு முன் நடந்து சென்ற மணியை, தீனா, கே.கே., ரோடு பிரசாந்த், 27; நரசிங்கபுரம் முகமது அனிபால், 30; வி.மருதுார் திவாகர், 24; ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கினர்.
இது குறித்த புகாரின்பேரில், டவுன் போலீசார் பிரசாந்த் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து தீனாவை கைது செய்தனர்.