Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி கோட்டையை பார்வையிட்ட அன்புமணி

செஞ்சி கோட்டையை பார்வையிட்ட அன்புமணி

செஞ்சி கோட்டையை பார்வையிட்ட அன்புமணி

செஞ்சி கோட்டையை பார்வையிட்ட அன்புமணி

ADDED : செப் 02, 2025 03:43 AM


Google News
Latest Tamil News
செஞ்சி: செஞ்சி கோட்டையை பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று பார்வையிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையை சில நாட்களுக்கு முன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய மரபு சின்னமாக அறிவித்தது. இதையடுத்து செஞ்சி கோட்டை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

இந்நிலையில் பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று மதியம் 12:00 மணியாளவில் செஞ்சி கோட்டைக்கு வருகை தந்தார்.

முதலில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தீபாராதனை காட்டினார். பின், ராஜகிரி கோட்டையின் வரைபடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கல்யாண மஹால், தர்பார், படைவீரர்கள் குடியிருப்பு, உடற்பயிற்சி கூடம், வெடி மருந்து கிடங்கு, நெற்களஞ்சியம் ஆகியவற்றை பார்வையிட்டார். வரலாற்று ஆய்வாளர்களிடம் கோட்டையின் வரலாற்றை கேட்டறிந்தார்.

அப்போது சிவக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநில துணைத் தலைவர் மணிமாறன், இளைஞர் சங்க துணைச் செயலாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் அருண்மொழி தேவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சீனுதமிழ்ச்செல்வன், செல்வமணி, முருகன், நகர செயலாளர் சின்னதம்பி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us