Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

ADDED : மார் 18, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.

மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் கோபி (எ) வேல்முருகன், பாசறை இணைச் செயலாளர் ஜியாவுதீன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசுகையில், 'வரும் 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைவது நிச்சயம். அந்தளவு பொதுமக்கள் இந்த ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியிலும், கோவத்திலும் உள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வர நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்' என்றார்.

கூட்டத்தில், கிளைச் செயலாளர்கள் சரவணன், ஏழுமலை, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் கமால்தீன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் தமிழ் கருணாகரன், விவசாய அணி தலைவர் பார்த்திபன்.

மாணவரணி துணைச் செயலாளர் குமரவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் தங்க பாண்டியன், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன்.

மாவட்ட பிரதிநிதி ராஜ், ஜெ., பேரவை துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார், வி.அரியலுார் ஊராட்சி தலைவர் பழனி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us