Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

ADDED : மே 24, 2025 09:29 PM


Google News
வானுார் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் போலீசார் நேற்று புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பையுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில், காஞ்சிபுரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் சிவக்குமார், 23; உத்தரராஜன் மகன் மோகன், 27; என்பதும், தனது ஊரில் விற்பதற்காக புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து, பஸ்சுக்காக காத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us