/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜூன் 01, 2025 12:12 AM

விக்கிரவாண்டி: புதுச்சேரியிலிருந்து பைக்கில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மாலை குச்சிபாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருக்கனுாரிலிருந்து 2 பேர் பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்தனர்.
போலீசார் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 90 மி.லி., அளவுள்ள 100 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
விசாரணையில், செஞ்சி அருகே உள்ள பாடியை சேர்ந்த அஜித்குமார், 26; ஆனந்தராஜ், 27; என தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.