Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜூஸ் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது 

ஜூஸ் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது 

ஜூஸ் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது 

ஜூஸ் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது 

ADDED : மார் 27, 2025 04:04 AM


Google News
விழுப்புரம்: ஜூஸ் கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர், 55, ஜூஸ் கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில், நேருஜி சாலையில் சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், 33; சுதன், 32; இருவரும் சத்தம் போட்டு கத்தியபடி வந்தனர். இதனை, அப்துல்காதர் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், சுதன் இருவரும், அவரை திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வன், சுதன் ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us