Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆவின் மேற்பார்வையாளர் வீட்டில் 13 சவரன் திருட்டு

ஆவின் மேற்பார்வையாளர் வீட்டில் 13 சவரன் திருட்டு

ஆவின் மேற்பார்வையாளர் வீட்டில் 13 சவரன் திருட்டு

ஆவின் மேற்பார்வையாளர் வீட்டில் 13 சவரன் திருட்டு

ADDED : ஜூன் 21, 2025 12:27 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆவின் மேற்பார்வையாளர் வீட்டில் 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 59; கள்ளக்குறிச்சி ஆவின் நிறுவனத்தில் மேற்பார்வையாளர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு குடும்பத்துடன் முதல் மாடி யில் படுத்து துாங்கினார்.

நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, 2 பீரோக்களை உடைத்து 13 சவரன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து, அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us