Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொக்கு மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

கொக்கு மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

கொக்கு மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

கொக்கு மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

ADDED : ஜூன் 12, 2024 11:57 PM


Google News
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கொக்கு மருந்து சாப்பிட்டு இளம் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவமாலா, 19; கடந்த 10ம் தேதி மாலை 4:00 மணியளவில் இவரது தாய் மற்றும் தந்தை இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனை சிவமாலா மறித்துள்ளார். ஆனால் இருவரும் அதனை கண்டுக்கொள்ளாமல் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சிவமாலா வீட்டிலிருந்த கொக்கு மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிவமாலாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து வசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us