ADDED : ஜூன் 09, 2024 04:41 AM
திருவெண்ணெய்நல்லுார் : குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் பருகம்பட்டு கிராம பகுதியில் ரோந்துசென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி மனைவி கீதாராணி, 45; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 60 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.