Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலை விபத்தில் டைலர் பலி

சாலை விபத்தில் டைலர் பலி

சாலை விபத்தில் டைலர் பலி

சாலை விபத்தில் டைலர் பலி

ADDED : ஜூலை 28, 2024 07:49 AM


Google News
Latest Tamil News
வானூர், ; பைக்கில் இருந்து தவறி விழுந்த டைலர் இறந்தார்.

மரக்காணம் அடுத்த காயல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரபு, 43; டைலர். சேதராப்பட்டில் உள்ள தையல் கடையில் வேலை செய்து வந்த இவர் கடந்த 25ம் தேதி இரவு 8;30 மணிக்கு கடையில் வேலையை முடித்து விட்டு, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார்.

சேதராப்பட்டு-ஆகாசம்பட்டு சாலையில் சென்றபோது, எதிரே திடீரென வந்த வாகனத்தால், பிரபு ஓட்டிச்சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஐந்தடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us