Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை

கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை

கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை

கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை

ADDED : ஜூலை 06, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
வானுார்: கிளியனுார் அருகே கார் மீது, லாரி மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சாலையோரம் கவிழ்ந்த லாரி, காரை போலீசார் மீட்டனர்.

தெலுங்கான மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பிரதீப்ராஜ், 21; இவர், புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சுமோ காரில் சென்று கொண்டிருந்தார். காரில் மேலும் 5 பேர் வந்தனர்.

மொளசூர், அய்யனார் கோவில் சந்திப்பு வளைவில் நள்ளிரவு 12:30 மணியளவில் வந்தபோது எதிரே திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற லாரி, கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், லாரியும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன.

இந்த விபத்தில், பிரதீப் ராஜ் காயமடைந்தார். காரில் இருந்த மற்ற 5 பேரும், லாரி டிரைவரும் காயமின்றி தப்பினர்.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் காயமடைந்த பிரதீப் ராஜை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us