ADDED : ஜூலை 14, 2024 11:14 PM
விழுப்புரம்: வளவனுார் அருகே புகை யிலை விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று குமாரகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், 56; மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.