Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தீர்த்தவாரி உற்சவம்

தீர்த்தவாரி உற்சவம்

தீர்த்தவாரி உற்சவம்

தீர்த்தவாரி உற்சவம்

ADDED : ஆக 03, 2024 11:54 PM


Google News
மயிலம்: மயிலம் அடுத்த செண்டூர் தொண்டியாற்றில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மயிலம் வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.

விழாவையொட்டி, நேற்று மதியம் 12:00 மணிக்கு மயிலம் வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி மயிலம் மலைக் கோவிலிலிருந்து புறப்பட்டு செண்டூர் தொண்டி ஆற்றில் தீர்த்த வாரி நடந்தது. மாலை 5:30 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.

ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us