Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பரிதாப பலி

பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பரிதாப பலி

பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பரிதாப பலி

பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பரிதாப பலி

ADDED : ஜூலை 27, 2024 02:04 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் வாலிபர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராமச்சந்திரன், 27; இவர், கடந்த 22ம் தேதி, திருக்கோவிலூரை சேர்ந்த தனது நண்பரான சிவராஜ் மகன் மணிரத்தினம், 28; என்பவருடன், பைக்கில் பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்தனர். அப்போது, விழுப்புரம் அடுத்த சுந்தரிபாளையம் மேம்பாலம் அருகே வந்தபோது, நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை ராமச்சந்திரன் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us