விழுப்புரம் : விழுப்புரம் அருகே பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கருங்காலிபட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகள் நிஷா, 16; இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.