Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

ADDED : ஜூலை 12, 2024 06:22 AM


Google News
திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல் நிலை சரியில்லாமல் வந்தவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

திண்டிவனம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41; இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தாார். இவரை நேற்று முன்தினம் நாய் கடித்துள்ளது.

இதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று காலை 10:00 மணியளவில், சீட்டு போடுவதற்காக நோயாளிகளுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். உடன் டாக்டர்கள் அவரை சோதித்ததில், மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us