Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து

சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து

சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து

சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து

ADDED : ஜூன் 10, 2024 01:26 AM


Google News
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மின் கம்பி உராய்வால் 4 ஏக்கர் பரப்பளவிலான சவுக்கு மரங்கள் எரிந்து சேதமானது.

திண்டிவனம் அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 41; இவர், அதே பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார்.

இவருடைய நிலத்திற்கு பக்கத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 50; என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார்.

நேற்று பிற்பகல் 2:30 மணியளவில், நிலத்திற்கு மேற்பகுதியில் சென்ற மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு சவுக்கு மரங்களில் தீ பற்றியது.

தகவலறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us