/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர்கள் யூனியன் தேர்தல் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர்கள் யூனியன் தேர்தல்
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர்கள் யூனியன் தேர்தல்
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர்கள் யூனியன் தேர்தல்
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர்கள் யூனியன் தேர்தல்
ADDED : ஜூலை 07, 2024 04:18 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி, விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களின் யூனியன் தேர்தல் நடந்தது.
பள்ளி தலைமை மாணவன், விளையாட்டு தலைமை மாணவன், குழு தலைமை மாணவன் மற்றும் கலாச்சார விழாக்களின் தலைமை மாணவன் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், 7ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை தேர்தலுக்கான நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.விண்ணப்பித்த மாணவர்கள், சக மாணவர்களின் வகுப்புகளுக்குச் சென்று ஓட்டு கேட்டு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தனர்.
மறுநாள் ஓட்டுச்சாவடி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓட்டளித்தனர்.
இதில், அதிக ஓட்டுகளை பெற்ற ஜெயேந்திர யூனியனின் மாணவர்களை பள்ளித் தலைமை மாணவன், விளையாட்டுத் தலைமை மாணவன், குழுத் தலைமை மாணவன் மற்றும் கலாச்சார விழாக்களின் தலைமை மாணவன் என 14 பேரை, தலைமை மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த மாணவர்களுக்கு, பள்ளி செயலாளர் ஜனார்த்தனன், உறுதிமொழி எடுக்க வைத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர்கள், துணை முதல்வர், உடற்கல்வி இயக்குனர் கலந்து கொண்டனர்.